கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எஸ்வத்த வடக்கு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் எஸ்வத்த வடக்கு, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிக்குள் துப்பாக்கி மருந்து ஏற்றப்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் எனவும், சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.