தென் கொரியாவில் காட்டுத் தீ – 4 பேர் உயிரிழப்பு!

0
18

தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதையடுத்து, அந்நாட்டில் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சுமார் 290 ஹெக்டேராக விரிவடைந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மூன்று வெவ்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.