நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
குறித்த அறிவுறுத்தலில் ‘வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நல்ல உறவில் செயல்பட வேண்டும். அவர்களைக் கையாள்வதில், அர்த்தமுள்ளதாகவும், கனிவாகவும், பொறுமையாகவும் செயல்படுங்கள். யாருக்கும் சிறப்பு சலுகை வழங்க வேண்டாம். உங்கள் தொழில்முறை பாரபட்சமற்ற தன்மை ஒரு முக்கியமான விடயம். சுதந்திரமான மற்றும் நியாயமான சூழலில் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கும் திறன் அவர்களுக்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும்’ என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.