உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுமாயின், தற்போதுள்ள சட்டத்திற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள், ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
340 உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலங்களும் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.