இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்குமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில்இ ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் தங்கச்சிமடத்தில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவர்கள் நேற்று முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், மாவட்ட ஆட்சியரின் அழைப்பிற்கு அமையஇ மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அவருடன் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் இதன்போது இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த போராட்டத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல அரசியல்; கட்சிகள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.