தொழிற்சங்கப் போராட்டம்: அம்பாறையிலும் தபால் சேவைகள் முடங்கின

0
146

அம்பாறை மாவட்டத்திலும் தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக, தபால் சேவைகள் முடங்கின.
இன்றும் நாளையும் தபாலகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேவைகளைப் பெற்றுக்கொள்ள
வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அரசாங்கம் தபால் சேவையை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.