தொழிலாளர் தேசிய சங்கத்தின் மக்கள் சந்திப்பு பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.சிறீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப், மற்றும் தோட்டக் குழு தலைவி, தலைவர்மார் எனப் பலரும் கலந்துகொண்டனர்.