த.தே.ம.முன்னணியின் செயலாளர் செல்வராஜாக கஜேந்திரன் ஊடக சந்திப்பு

0
111

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தினத்தை குழப்பும் வகையில் அரசாங்கம் கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா
கஜேந்திரன் தெரிவித்தார்

கொக்கட்டிச்சோலை, வாகரை பகுதிகளில் மாவீரர் தினம் இன்று நடைபெறாது நாளை நடைபெறும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் இவற்றினை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார்