
யாழ்ப்பாணம், பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து நேற்று பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர், நடுக்கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை துறைமுக கடலில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதான ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், படகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு இன்று அதிகாலை கரைக்கு கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.