28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நத்தார் பண்டிகை: மட்டக்களப்பு சிறையிலிருந்து 46 கைதிகள் விடுதலை

நத்தார் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் பணிப்புரைக்கு அமைய மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து
46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் குற்ற செயல்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறு குற்ற தண்டனை
கைதிகளே விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சர் என்.பிரபாகரன் முன்னிலையில், கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை ,சிறைச்சாலை பிரதம ஜெயிலர் உட்பட சர்வமத தலைவர்கள்,
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles