நல்லூரில் நாள்தோறும் தேவாரமும் பொழிப்பும் விஜயதசமியன்று ஆரம்பமாகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தினமும் தேவாரம் மற்றும் பொழிப்பு திருப்பணி எதிர்வரும் விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
தினமும் மாலை 5மணி பூஜையை தொடர்ந்து வழிபாடுகளைத்”நல்லூரில் நாளுக்கோர் தேவாரம்” என்ற இந்த திருப்பணி முன்னேடுக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஆஸ்தான ஓதுவார் விஸ்வபிரசன்னா சிவாச்சாரியார் தினமும் ஒரு தேவாரம் ஓதி பொழிப்பையும் வழங்குவார்.