நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பொலிசாரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகாதெரிவித்தார்
வரலாற்றுபிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம் பெற்று வரும் நிலையில் எதிர்வரும் வாரம் நல்லூர் ஆலயத்தில் விசேட உற்சவங்கள் இடம் பெற உள்ள நிலையில்
பெருமளவான பக்தர்கள் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் திருட்டுக்களை தடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து விசேட போலிஸ் அணியினர் நல்லூர் ஆலய பாதுகாப்பு என வரவழைக்கப்பட்டுள்ளனர்
சிவில் மற்றும் சீருடையில் சுமார் 600 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
அத்தோடு தென்பகுதி மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து திருட்டுடன் தொடர்புடைய பல்வேறு சந்தேக நபர்களை இனங்காணக்கூடிய போலீஸ் அணியொன்றும் நல்லூர் ஆலய உற்சவத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
அத்தோடு குறிப்பாக ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களும் தொடர்புடையவர்கள் தொடர்பிலான புகைப்படங்களையும் ஆலய நுழைவாயில்களில் காட்சிப்படுத்த வுள்ளதாகவும் அவ்வாறு புகைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டவர்கள் யாராவது ஆலய வளாகத்தில் இனம் காணப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் உரிய சந்தேகம் அவர்களை விரைவில் கைது செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார் எனவே போலீசார்னால் பல்வேறுபட்ட வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்