யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபை நூலகங்களின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபை நூலகங்களின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா, நல்லூர் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
நல்லூர் பிரதேச சபை செயலாளர் யு.ஜெலீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக போதனா வைத்தியசாலையின் உளநல்ல வைத்திய நிபுணர் கலாநிதி சி.சிவதாஸூம், சிறப்பு விருந்தினராக கொக்குவில் இந்து கல்லூரியின் அதிபர் பெ.வசந்தனும் கலந்து கொண்டார்.
விழாவில் தமிழ் பேச்சு, ஆங்கில பாடல், பட்டிமன்றம் மற்றும் விருந்தினர் உரைகள் இடம்பெற்றன.