கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை விரைவில் இனங்கண்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு பொலிஸ் கொத்தணி துரிதமாக முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்களை இனங்காண்பதிலும் தொற்று பரவல் கட்டுப்படுத்துவதிலும் பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித் துள்ளது.
இந்நிலையில், ஒக்டோபர் மாதத்தில் பத்தாயிரத்திற்குச் சற்று குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப் பட்டனர். எனினும் இரு வாரங்களில் 6000 தொற்றாளர்கள் வரை இனங்காணப்படக் கூடிய நிலைமை நவம்பர் மாதத் தில் ஏற்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மா தம் அபாய நிலையிலுள்ளது என்பது இதன் மூலம் தெளி வாகிறது.
அத்துடன், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளது. சனிக்கிழமை மரணங்கள் எவையும் இனங் காணப்படவில்லை என்றாலும் , ஞாயிறன்று 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெருமளவானவை கொழும் பில் பதிவாகிய மரணங்களாகும்.
அதற்கமைய அபாயம் எங்கு காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.
கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகள் தற் போதும் எச்சரிக்கை மிக்கவையாகவே உள்ளன. இவற்றை நாம் சரியாக இனங்காண வேண்டும்.
அதன் காரணமாகவே மேல் மாகாணத்தில் பல பொலிஸ் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் மேலும் நீடிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தன் மை நேரடியாகக் கண்காணிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.
அதே போன்று பொலிஸ் கொத்தணி தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
காரணம் பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் பெருமளவா னோர் தனிமைப்படுத்தப்பட்டால் அது தொற்றாளர்களை இனங்காண்பதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
எவ்வாறிருப்பினும் பொலிஸ் கொத்தணி தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தும் பேணு வதற்கு தொழிநுட்ப ரீதியான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித் துள்ளார்.