நவாலியில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
144

நவாலியில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி – மூத்தநயினார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவரது சடலம் நேற்றையதினம் (18) மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்த அவர் கிணற்றில் விழுந்தவேளை அவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.