நாகர்கோவில் மேற்கில்  10 படகுகள் தீக்கிரை!

0
321

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவிலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.

கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது இத்தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயமே இவ்வாறு தீயிடப்பட்டுள்ளது.

அல்ஜித்தா , தில்லையடி, புத்தளம் முகவரியில் வசிக்கும்  சாகுல் ஹமீது ஜௌபர் (672332982V) என்பவருக்குச் சொந்தமான 10 படகுகளே இன்று அதிகாலை 2 மணியளவில் தீக்கிரயாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இதற்கான  காரணம், சந்தேக நபர்களோ இதுவரை  அறியப்படவில்லை .

இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.