யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.
கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது இத்தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயமே இவ்வாறு தீயிடப்பட்டுள்ளது.
அல்ஜித்தா , தில்லையடி, புத்தளம் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் (672332982V) என்பவருக்குச் சொந்தமான 10 படகுகளே இன்று அதிகாலை 2 மணியளவில் தீக்கிரயாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இதற்கான காரணம், சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை .
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.