நாகானந்த கொடித்துவக்கு சட்டத்தரணி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொழில் முறைகேட்டில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாகானந்த கொடித்துவக்குவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த பின்னர் பிரியந்த ஜயவர்தன, பிரிதி பத்மன் சூரசேன, மற்றும் எஸ். துரைராஜா ஆகயோர் அடங்கிய உயர் நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.