நாடளாவிய ரீதியில் இன்று 75 சதவீதமான பஸ் போக்குவரத்து முன்னெடுப்பு

0
144

நாடளாவிய ரீதியில் இன்று 75 சதவீதமான பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படுப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தனியார் பஸ் போக்குவரத்து வழமைக்கு திரும்பியிருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் பயணிகளின் எண்ணிக்கை வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.