நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக கொழும்பு முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிம்புட்டான பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 300 கிராம் ஐஸ் போதைப் பொருள், 125,000 ரூபாய் பணம் என்பவற்றுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த 24 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திமுதுவத்த பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 114 கிராம் 200 மில்லிகிரர்ம ஐஸ்போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹோக்கந்தர பிரதேசத்தை சேர்ந்த 37 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 31 கிராம் 540 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹோக்கந்தர பிரதேசத்தை சேர்ந்த 35 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா கடவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இ.போ.ச டிப்போவுக்கு அருகில் 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ராகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வெல்லம்பிட்டிய மற்றும் கிராண்டபாஸ் ஆகிய பிரதேசங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது 16 கிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு, தேதியவல பிரNதுசத்தில் 5 கிராம் 750 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 41 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.