நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

0
64

நாடாளுமன்றம் இன்று முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
கடந்த 6 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், காலை. 9.30 முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, காலை 10.30மணி முதல் மாலை 5.00 மணி வரை சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டுள்ள ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து மாலை 5.00மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை ஆளும்கட்சி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜூன் 19 ஆம் திகதி சீட்டாட்டத் தொழில் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் க விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஜூன் 20 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்ட பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம், மற்றும் யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.