நாடாளுமன்றம் இன்று முற்பகல் 09.30 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் 2307-12 மற்றும் 2308-26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழ் 2308-51 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்துள்ளார். அதனையடுத்து, தனியார் உறுப்பினர் சட்டமூலமாக, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டமூலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டமூலம் ஆகியவை இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு முன்வைக்கப்படவுள்ளது.