நாட்டில் மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானம்

0
148

நாட்டில் குறிப்பிட்ட சில மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கிய கடன் உதவியை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரு மருந்துகளே நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையின் மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டே இந்த மருந்துகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.