நாயினால் தகராறு! – சகோதரன் வெட்டிப் படுகொலை

0
148

பனாமுற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்தில் தனது சகோதரனைக் கைக்கோடரி மற்றும் கத்தியால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் குழந்தையை சகோதரன் வீட்டில் இருந்த நாய் கடித்ததில் ஏற்பட்ட தகராறில் சந்தேகநபரின் மனைவி கத்தியால் குத்தித்தப்பட்டு காயமடைந்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த சந்தேகநபர் கோடரி மற்றும் கத்தியால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய, முலஎடியாவல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பனாமுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.