நாளை தீபாவளி! யாழ். நகரப்பகுதியில் இன்றைய நிலை

0
303

வழமையாக தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ். நகரம் நிரம்பி வழியும். ஆனால், இம்முறை கொரோனா தொற்று அச்சத்தால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது. புடைவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாகக் காணப்படுகின்றது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச சூழ்நிலை காரணமாக வீடுகளிலிருந்து தீபாவளியைக் கொண்டாடுமாறு சுகாதாரப் பிரிவினர் மற்றும் மதத் தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை தீபாவளி வியாபாரம் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அங்காடி வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என ஏற்கனவே யாழ். மாநகர சபை முதல்வரால் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.