நாளை மூடப்படுகிறது புளூமெண்டல் தொடருந்து கடவை!

0
15

புனரமைப்பு பணிகள் காரணமாக புளூமெண்டல் தொடருந்து கடவை நாளை (01) முழுமையாக மூடப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது .அதன்படி நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த பாதை மூடப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் தொடருந்து பாதையில் உள்ள ப்ளூமெண்டல் தொடருந்து கடவையில் அவசர பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.