நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 10 வகையான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் திருமதி சகிலா இஸ்ஸதீனிடம் இந்த மருத்துவ உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் மாஹிர், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.