அம்பாறை நிந்தவூரில் நேற்று மாலை வேளை கடலில் மூழ்கிக் காணமல் போன நிலையில், தேடப்பட்டு வந்த இரு மாணவர்களின் சடலங்களும்
இன்று மீட்கப்பட்டன.
மாளிகைக்காட்டைச் சேர்ந்த 15 வயதுடைய சூர்தீன் முஹமட் முன்சிப் மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த 15 வயதுடைய ரிஸ்வான் முஹமட் இல்ஹம் ஆகியோரே
சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாளிகைக்காட்டைச் சேர்ந்த மாணவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்ட நிலையில், சாய்ந்தமருதைச் சேர்ந்த மாணவனின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ரீ.சபீர் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Home கிழக்கு செய்திகள் நிந்தவூர் கடலில் மூழ்கிக் காணாமல் போன மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.