நீதிமன்ற களஞ்சியத்திலிருந்த கஞ்சா மாயம்!

0
141

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கிராம் கஞ்சா காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சிய அறையின் சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியால் இந்த முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் 50 கிலோ கஞ்சா களவாடப்பட்டுள்ளது அல்லது மாயமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சான்று பொருளே இவ்வாறு காணாமல் போய் உள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் மாற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.