தற்போதுள்ள வெப்பமான காலநிலையில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க அதிகளவு நீரை அருந்துங்கள் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்தார்
அதிக வெப்பநிலையில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள முடியும் என்பது தொடர்பில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேடசெவ்வியின் போதுமேற்கண்டவாறு தெரிவித்தார்
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை காணப்படுகின்றது இதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
குறிப்பாக மதிய வேளையில் அதிக வெப்பம் காணப்படுகின்றது குறிப்பாக 11 மணியிலிருந்து 2 மணி வரை யானகாலப்பகுதியில் அதிகமான வெப்பநிலை காணப்படுகின்றது.
இந்த வெப்ப அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய வருத்தங்கள் என்று கூறும்போது நீரிழப்பு ஏற்படும் அதனை தடுப்பதற்கு போதியளவு நீர் ஆகாரம் அருந்த வேண்டும்.
சாதாரணமாக வயது வந்தவர்கள் 2-3 லீற்றர் நீரை சாதாரணமாக அருந்த வேண்டும்
தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை விட அதிகளவு நீரை அருந்த வேண்டும்.
குறிப்பாக சிறுவர்கள் 2 -3லீற்றர் நீர் அருந்துவது அவசியமாகும்
அடுத்ததாக மதிய வேளைகளில் பிரயாணங்களை தவிர்ப்பதனால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்
குறிப்பாக மதிய நேரங்களில் விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் தவிர்ப்பது நல்லது இந்த வெப்பநிலைஅதிகரிப்பானது அடுத்த இரண்டு கிழமைகளுக்கு நீடிக்கலாம்
அதேவேளை போதியளவு நீர் உள்ள பழ வகைகளை உட்கொள்ள வேண்டும் வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.
பழங்கள் போதியளவு சாப்பிடும் பொழுது வெப்பத்தினால் ஏற்படும் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும் அதேபோல உடல் வெப்பநிலையை குறைப்பதற்காக நீராடுதல் குறிப்பாக காலை அல்லது மாலை வேலைகளில் நீராடுவதன் மூலம் உடல் வெப்பநிலையினை குறைக்க முடியும் இதனால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகளையும் தவிர்க்கலாம்
வெப்பமுள்ள சூழ்நிலையில் சில வேளைகளில் சுவாசத்தொற்று நோய்ஏற்படலாம் ஆகவே பொது இடங்களிற்கு
செல்லும்போது அவதானமாக இருக்க வேண்டும் குறிப்பாக தூசுகள் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் இவை மிகவும் முக்கியமாகும் என்றார்,