கொழும்பு அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்தியாவல பிரதேசத்தில், நபரொருவர் நீரோடையில் விழுந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
70 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.