நீர் வழங்கும் பவுசர் சேவையில்
ஈடுபடும் சம்பிரதாய நிகழ்வு

0
203

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட ஒரு கோடியே 40 இலட்சம் பெறுமதியான நீர் வழங்கும் பவுசர் சம்பிரதாய
பூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் நிகழ்வு நேற்று மாலை கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண அமைச்சின் ஊடாக பிரதமர் தினேஸ் குணவர்த்தனவினால் கடந்த வாரம் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரனிடம் இந்நீர் வழங்கும் பவுசர் கையளிக்கப்பட்டது.

கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்று வருகின்ற ஆலய உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்திற்கான நீர் வழங்கும் பணிகள் இதன் மூலம் இடம்பெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் ஆரம்ப பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.கௌரிசங்கர் குருக்கள் நடாத்தி வைத்ததுடன் நிகழ்வில் பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட ஆலய நிருவாகத்தினரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கான குடிநீர் வழங்கும் பணிகள் இதன்மூலம் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக நிகழ்வின்போது தவிசாளர் கருத்து தெரிவித்தார்.