நுண்நிதியில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் உள்ளூர் மக்களை துன்புறுத்துகின்றனர்

0
81
நுண்நிதியில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தங்களிடம் கடன் பெறும் உள்ளூர் மக்களை துன்புறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.“வருகை விசாவில் வரும் இந்த வெளிநாட்டினர் 300 சதவீத அதிக வட்டிக்கு கடன் தருகிறார்கள். கடன் வாங்கியவர்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். அவர்கள் ஏனைய கடன் வழங்குபவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். கள்ளத்தனமான காதல் விவகாரங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடன் வாங்கியவர்களின் குடும்பங்களை அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்தார்.“நான் ஏற்கனவே மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் பேசியுள்ளேன், அத்தகைய கடன் வழங்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் சட்ட குறைபாடுகள் இருப்பதாக அவர் எனக்குத் தெரிவித்தார்,” என்றார்.இதற்குப் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நுண் நிதித் திருத்தச் சட்டமூலம் இந்த விடயத்தை கையாளும்.“நுண்நிதியில் ஈடுபடுபவர்கள் தொடர்பான பிரச்சினையில் நாம் இப்போது கவனம் செலுத்தாவிட்டால் பாரிய பிரச்சினையாக மாறும்,” என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.