தற்போது வசந்த காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்இ நுவரெலியாவிற்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறை, சித்திரை புத்தாண்டு ஆகியவற்றின் காரணமாக உள்ளூர் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி, நுவரெலியா – ஹட்டன் போன்ற பிரதான வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பிரதான நுழைவாயில் சோதனைச் சாவடி மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் அதிகளவான காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.