ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து நுவரெலியா – கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கந்தப்பளை பிரதேச பொதுமக்களும் இணைந்து கொண்டனர்.
இதன்போது மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள், எதிர்ப்புகளை பதாகைகளை ஏந்தியவாறு வெளிப்படுத்தி, கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.