நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில்!

0
4

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று (12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.எவ்வாறாயினும் விபத்து , அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது .