நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

0
280

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், யாழப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், கடற்தொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், நெடுந்தீவு பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

பிரதேசத்தின் கடல் போக்குவரத்து, சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

சுகாதாரம், கல்வி, வீட்டுத்திட்டம், போக்குவரத்து, சமுர்த்தி, மீன்பிடி, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த விடயங்களும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.