பசில் ராஜபக்ஸ நாட்டை வந்தடைந்தார்

0
167
**EDS: TWITTER IMAGE POSTED BY @narendramodi ON WEDNESDAY, MARCH 16, 2022.** New Delhi: Prime Minister Narendra Modi with Sri Lankan Finance Minister Basil Rajapaksa, during their meeting in New Delhi. (PTI Photo)(PTI03_16_2022_000277B)

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றுள்ளனர்.
ஒன்றரை மாதங்களின் பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர், இரட்டைக் குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.
இந்தநிலையில் பசில் ராஜபக்சவின் வருகையுடன் எதிர்வரும் தேர்தலுக்கான தமது கட்சியின் திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஆளும்கட்சி கூறியுள்ளது.
இதேவேளை சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானங்களை அவர் எடுப்பர் என்றும் அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.