அரசாங்கத்தால் நேற்றிரவு 11 மணிமுதல் அமுல் படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டு நடைமுறை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மக்களாலும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

காத்தான்குடியில் பொலிசாரும் இராணுவத்தினரும் சோதனை நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் யாவும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயல் இழந்துள்ளதுடன் வீதிகளும் வெறி ச்சோடிக் காணப்படுகின்றன.