பலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி ரவூப் ஹக்கீம் மன்றில் உரை

0
16

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார்.

இதன்போது பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு நூதன முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தும், பலஸ்தீன தேசிய கொடியை கழுத்தில் அணிந்தபடி அவரது கருத்துக்களை முன்வைத்திருந்தமை விசேட அம்சமாகும்.

புனித ரமழான் நோன்பு காலம் என்பதால், காஸா மீதான தாக்குதலுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.