இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு பலாலி விமான நிலைய செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் இன்று செவ்வாய்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அடுத்த வருடத்தில் 8 இலட்சம் சுற்றுலாத் துறையினரை நாட்டுக்கு வரவழைப்பதற்கு எதிர்பார்க்கிறது. இதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெறக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பலாலி விமான நிலையத்தின் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டார்.
350 கோடி டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் இலங்கை, 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.