தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், மெதிரிகிரியவில் உள்ள கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தலா 9 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதுடன்,வினாடிக்கு 500 கனவளவு நீர் கவுடுல்ல ஓயாவிற்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.