எரிபொருள் விலையேற்றத்தை காரணமாக வைத்து பஸ் கட்டணத்தை ஒரு ரூபாயால்கூட அதிகரிக்கப்போவது இல்லை என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஆனால் எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பொதுமக்களுக்கு இயலுமானவரை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
கடந்த காலங்களில் பயணத் தடை காரணமாக இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட போது, பஸ் கட்டணத்தில் 20 சதவீத திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால் இந்த தடவை கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.