கொழும்பு – குருநாகல் வீதியின் இரத்மல்கொட – இம்புல்கொட பிரதேசத்தில் பஸ் மற்றும் டிப்பர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது எனப் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஒரு பெண்ணும், ஒன்பது ஆண்களும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த பெண் பதவிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.