இணைந்த கரங்கள் அமைப்பினால் அம்பாறை மாவட்டம் பொத்துவில் சிங்கள மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ரி.வி. விமலசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக வணக்கத்துக்குரிய வறக்காப்போல இந்திரஸ்ரீPதேரர் பாடசாலையின் பிரதி அதிபர் இந்திரஜீத், ஆசிரியர்கள் இணைந்த கரங்கள் இணைப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான புக்கப்பை, உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.