ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் ஒருபகுதியாக மனைப் பொருளாதார வீட்டுத் தோட்ட அபிவிருத்தி திட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒரு கிராம சேவகர் பிரிவில் 50 வீட்டுத்தோட்டங்கள் என்ற வகையில் இங்குள்ள 29 கிராம சேவகர் பிரிவுகளிலும் 1450 வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதற்கான பணியில் கல்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்திப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
இன்று கல்முனை வடக்கு மேற்கு சமுர்த்தி வலயத்திற்குட்பட்ட பாண்டிருப்பு ஒன்று பி கிராம அலுவலகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 சமுர்த்திப் பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்குரிய பயனுள்ள கத்தரி, மிளகு, கறிமிளகாய் போன்ற நாற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாண்டிருப்பு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.தியாகராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை வடக்கு சமுர்த்தி தலைமை முகாமையாளர் கே.இதயராஜா, திட்டமுகாமையாளர், வலய உதவியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நான்கு வகையைச் சேர்ந்த 12 நாற்றக்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.