பாண்டிருப்பு திரௌபதைஅம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

0
210

கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்;பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் ஏழாம்; நாள் இரவு ஸ்ரீ கிருஸ்ணர் துவராகபுரியில் இருந்து அத்தினாபுரத்திற்கு வருகைதரும் சுவாமி எழுந்தருளப்பண்ணல் நிகழ்வும் விசேட பூஜை வழிபாடுகள் திரௌபதை அம்மன் ஆலயபிரதம பூசகர் சீவரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.600 வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவில் இருந்து வருகைதந்த தாதன் மாமுனியினால் ஸ்தாபிக்கப்பட்ட பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயமானது மகாபார இதிகாசத்தை நினைவு கூறும் முகமாக 18 தினங்கள் நடைபெறுவதுவழக்கமாகும்.

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து திரௌபதை அம்மன் ஆலயம் நோக்கி ஸ்ரீ கிருஸ்ணர் சென்றடைந்தார். இதன் போதுபக்தர்கள் கற்பூரச்சட்டி,காவடி,அங்கப்பிரதடசணை ஆகிய நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினார்கள்.

திரௌபதை அம்மன் ஆலய உற்சவமானது கடந்த 20 ஆம் திகதி திருக்கதவு திறத்தல்,கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன் முக்கிய நிகழ்வுகளாக எதிர்வரம் முதலாம் திகதி கலியாணக்கால் வெட்டுதல், 05 ஆம் திகதி பாண்டவர்கள்,திரௌபதை சகிதம் வனவாசம் செல்லல், 06 ஆம் திகதி அருச்சுனன் தவநிலைசெல்லல், 07 ஆம் திகதி மாலை ‘தீப்பள்ளயத்தின் சிகரம்’ எனப்போற்றப்படும் தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று மறுநாள் தீக்குழிக்கு பால்வார்க்கும் பாற்பள்ளயசடங்கு, தருமருக்கு முடி சூட்டுதல்,அம்மன் ஊர்வலம் ஆகியவற்றுடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.