பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இந்த சந்திப்பு பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

தனித்தனியாக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரே பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
இச்சந்திப்புகளின் போது பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.