பாரவூர்தியொன்றுடன் உந்துருளி ஒன்று மோதுண்டமையினால் உந்துருளியில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பேலியகொடை – புளுகஹ சந்தியில் நேற்று இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.