பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் மேலும் எண்மருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் 30 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே, எண்மருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பாராளுமன்றத்தில் கடந்த வாரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் 54 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.