நோன்புப் பெருநாள் தினத்தில் கறுப்பு கொடியை பறக்கவிட்டு துக்கதினம் அனுஸ்டிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் விடுத்த கோரிக்கையினை கண்டித்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் மத்திய பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு சுலோக அட்டைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளுடன் பங்கேற்றனர்.
இதன்போது ஒருபுறம் அரசோடு நன்றாக உறவாடி விட்டு மறுபுறம் மக்களிடம் அரசுக்கு எதிராக செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறானநாடகங்கள் இனிநடக்கு அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டனர்.